Tamil News Live 24 February 2026: வாட்ஸ்அப்-புக்கு இன்று பிறந்தநாள்! | ஜெ. ஜெயலலிதா பிறந்தநாள் | NPM
News Headlines Today: nainarpalayam.com brings the Latest News, Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. It is the most reliable news in politics, sports, entertainment and business, featuring National and International News.
தமிழகத்தின் இரும்புப்
பெண்மணி: ஜெ. ஜெயலலிதா பிறந்தநாள் !
அரசியல்
மேடைகளில் சிம்மக் குரலோன்... நிர்வாகத்தில் இரும்புக்கரம்... எதிரிகளைத் தன் ஒற்றைப்
பார்வையால் பணிய வைத்த ஆளுமை. அவர்தான் "அம்மா" என்று தமிழக மக்களால் அன்போடு
அழைக்கப்பட்ட ஜெ. ஜெயலலிதா.
கலைத்துறையில்
'காவியத் தலைவி'யாக மின்னியவர், அரசியல் களத்தில் கால் பதித்தபோது பல சவால்களைச் சந்தித்தார்.
ஆனால், அத்தனையையும் தவிடு பொடியாக்கி, தமிழகத்தின் முதலமைச்சராகப் பலமுறை அரியணை ஏறியது
ஒரு சரித்திரம். “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற தாரக மந்திரத்தோடு அவர்
கொண்டு வந்த திட்டங்கள் இன்றும் அடித்தட்டு மக்களின் அடுப்பங்கடி வரை பேசப்படுகிறது.
தோல்விகளைக்
கண்டு துவளாத துணிச்சல், ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் ஒரு பெண்ணாக நின்று வென்றெடுத்த
அதிகாரம் என ஜெயலலிதா வாழ்க்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பாடம். இன்று அவர் நம்மிடையே
இல்லை என்றாலும், அவர் விட்டுச் சென்ற ஆளுமையும், துணிச்சலும் தமிழக அரசியலில் என்றும்
நீங்காத சுவடுகளாக இருக்கும்.
முக்கிய சாதனைகள்:
அம்மா
உணவகம்: ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க அவர் கொண்டு வந்த உலகத் தரம் வாய்ந்த திட்டம்.
தொட்டில்
குழந்தைத் திட்டம்: பெண் சிசுக்கொலையைத் தடுத்து நிறுத்த இந்தியாவிற்கே முன்னோடியாகத்
திகழ்ந்த புரட்சித் திட்டம்.
கல்வி
ஊக்கம்: மாணவிகளுக்கு மிதிவண்டி (BiCycle), லேப்டாப் (Laptop) என கல்வித் துறையில்
அவர் நிகழ்த்திய மாற்றங்கள் ஏராளம்.
வாட்ஸ்அப்-புக்கு இன்று பிறந்தநாள்!
காலையில்
எழுந்தவுடன் காபி குடிக்கிறோமோ இல்லையோ, போனை எடுத்து வாட்ஸ்அப் நோட்டிபிகேஷனைப் பார்ப்பதுதான்
பலருக்கும் முதல் வேலை.
அப்படி
"என்ன விசேஷம்?" என்று நாம் கேட்கும் "What's Up?" என்ற சொல்லையே
பெயராகக் கொண்டு, 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ல் ஜான் கோம் மற்றும் பிரையன் ஆக்டன்
ஆகியோரால் இந்தத் தளம் தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில்
வெறும் 'ஸ்டேட்டஸ்' வைக்கும் வசதியாகத் தொடங்கப்பட்ட இது, இன்று மெசேஜ், போட்டோ, வீடியோ,
ஆடியோ கால், வீடியோ கால் எனத் தாண்டி 'பேமெண்ட்' வரை வளர்ந்து நிற்கிறது. 17 ஆண்டுகளைக்
கடந்து, உலகெங்கும் 200 கோடிக்கும் அதிகமான இதயங்களை இணைக்கும் பாலமாக இருக்கும் இந்தத்
தொழில்நுட்ப அதிசயத்திற்கு நாமும் ஒரு வாழ்த்துக்கள் சொல்லுவோம்.
ஆர். முத்தையா தமிழ்
தட்டச்சுப் பொறியின் தந்தை பிறந்த தினம் இன்று
தமிழ்
தட்டச்சுப் பொறியின் தந்தை என்று போற்றப்படும் ஆர். முத்தையா அவர்களின் பிறந்த தினம்
இன்று.
தமிழ்
மொழிக்குத் தொழில்நுட்ப ரீதியாகப் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்தவர் ஆர். முத்தையா.
1886-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி பிறந்த இவர், தமிழுக்கெனத் தனித்துவமான விசைப்பலகையை
(Keyboard) உருவாக்கிய பெருமைக்குரியவர்.
அக்காலத்தில்
ஆங்கிலத் தட்டச்சுப் பொறிகளே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், தமிழ் எழுத்துக்களின்
வரிவடிவங்களை ஆராய்ந்து, ஒரு தட்டச்சுப் பொறியில் தமிழ் எழுத்துக்களை எப்படிச் சுலபமாக
அடுக்கலாம் என்று சிந்தித்துச் செயல்படுத்தியவர் இவர். இவரது இந்த விடாமுயற்சியால்தான்
அரசு அலுவலகங்களிலும், இதழியல் துறையிலும் தமிழ் தட்டச்சு வேகமாகப் பரவியது. இன்றைய
கணினி விசைப்பலகைக்கும் இவரது ஆரம்பகால கண்டுபிடிப்புகளே அடித்தளம் என்றால் அது மிகையல்ல.
தங்கம் / வெள்ளி விலை
இன்று.
வெள்ளி
விலை கிராமுக்கு ரூ.10/- குறைந்து ஒரு கிராம் ரூ.290/- க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000/-
க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
தங்கம்
விலை கிராமுக்கு ரூ.30/- உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,890/- க்கும் சவரனுக்கு ரூ.240/-
உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,120/- க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



Comments
Post a Comment