Today News செய்திகள் 10.10.2020 | NPM

Today News 10.10.2020 | NPM

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி, கரையான்சாவடி கிளை சிறையில் கைதியை பார்க்க கஞ்சாவுடன் சிறைக்கு சென்ற இளம்பெண் கைது.

-------

சென்னையில் 9 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.

-------

சென்னை வடக்கு மண்டலத்தில் ஒரே காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகள் பணி முடித்த 98 காவலர்களுக்கு வேறு காவல் நிலையங்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

-------

உலக மனநல தினம்

மனநலப் பிரச்சினைகள் குறித்த உலக மக்களின் விழிப்புணர்வை அதிகரித்தல் மற்றும் மனநலத்தை மேம்படுத்துவதற்கான ஆதரவை ஒருங்கிணைத்தல் ஆகிய நோக்கங்களுடன் அக்டோபர் 10-ம் நாளை உலக மனநல நாளாக ஐநா சபையின் துணை அமைப்பான உலக சுகாதார நிறுவனம் (WHO) 1992 முதல் அனுசரித்துவருகிறது

நீங்கள் நம்பும் ஒருவரிடம் உங்கள் பிரச்சனைகளை மனம் விட்டு பேசுங்கள்..

பேசினால் தீராத விஷயம் என்று இந்த உலகில் எதுவுமில்லை...

-------

ஓபிஎஸ் இன்று திருப்பதி தரிசனம்.


-------

மதுரையில் இடைவிடாத கனமழை.  இரண்டு மணி நேரமாகக் கொட்டி தீர்த்ததில் வெள்ளக்காடானது, மதுரை.

-------

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை பெண் ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த ஜூலையில் நடைபெற்ற ஊராட்சிக் கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டதாக புகார்.

-------

ம.தி.மு.க, தனி சின்னத்தில் தான் போட்டியிடும்- செய்தியாளர்களிடம் தலைவர் வைகோ அறிவிப்பு.

-------

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கன மழையும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

-------

மத்திய ரிசர்வ் காவல் படை( CRPF) தேர்வு;

தமிழகத்தில் ஒரு தேர்வு மையம் கூட இல்லை. 

-------

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part I | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM